Saturday, 19 November 2016

அரச மரத்தின் மகத்துவம்

அரச மரத்தின் மகத்துவம்
அரச மரம் கூரிய இலைகளையுடைய பெருமரம், இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இதன் பூர்வீகம் இந்தியா, இலங்கை, சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் தான். தமிழகம் எங்கும் வளர்கின்றது. சிற்றரசு, பேரரசு, கொடியரசு, பூவரசு இதன் வகைகளாகும். இம்மரத்திற்கு அசுவத்தம், அத்திரு, அத்துகமானி, அச்சுவத்தம், அத்துமானி, அத்திரா, கணவன்,  ஆச்சவரி, ஆராகவரியம், ஆராமரியம், ஆள்வணங்கி, ஆல்வள்ளரி, குஞ்சராசணம்,  சித்திரவேகை, இலணை, சயிக்கர், சரணம், சராசணம் என்று வேறு பெயர்களும் உண்டு.
மலட்டுத் தன்மை
நீக்கும் அரச மரம்
“அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்” என்றொரு பழமொழி இருக்கிறது. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும் என்பதே ஆகும். மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது. குறிப்பாக விதையை இடித்து பொடியாக்கி ஒரு சிட்டிகையை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர ஆண் மலட்டுத் தன்மையை நீக்கி உயிர் அணுக்களைப் பெருக்கும். இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த  நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என  பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள்  நீங்குகிறது. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது.
இதர மருத்துவ குணங்கள்
இம்மரத்தின் துளிர் இலையை  அரைத்துப் பற்றிட புண், வெட்டுக்காயம் விரைவில் ஆறும். இதன் வேர்ப்பட்டை 30  கிராம் எடுத்து 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி  வடிகட்டி சர்க்கரை சேர்த்து  பருகிவர வெட்டைச் சூடு, சொறி, திணவு, நீர்  எரிச்சல், சிரங்கு ஆகியவை மறையும். மரப்பட்டையை கருக்கி பொடியாக்கி தேங்கா  எண்ணெயில் கலந்து புண், சொறிகளுக்கு பூச குணமாகும். பட்டைத்தூள் 2 சிட்டிகை  அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் ½ மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி குடிக்க  விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் குணமாகும். கொழுந்தை கைப்பிடியளவு  எடுத்து ½ லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக  வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 மணிக்கு ஒரு குடித்து வர காய்ச்சல், தாகம்  நீங்கும். பழத்தை உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து  வெந்நீரில் 2 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சுவாசக் காசம் நீங்கும்.


http://thamil.co.uk/?p=4952 

No comments:

Post a Comment