மரம் பற்றி
- வணக்கம்...
- மரங்களைப் பாடுவேன்.
- வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்?
- மரம் என்றீர்!
- மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
- வணக்கம்,அவ்வையே நீட்டோலை வாசியான் யார் என்றீர்?
- மரம் என்றீர்!
- மரம் என்றால் அத்தனை இழிவா?
- பக்கத்தில் யாரது பாரதி தானே?
- பாஞ்சாலி மீர்க்காத பாமரரை என்ன வென்றீர்?
- நெட்டை மரங்கள் என்றீர்!
- மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
- மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
- பூமியின் ஆச்சிரியகுறி,
- நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
- விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
- சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
- உயிர் ஒழுகும் மலர்கள்,
- மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
- மனிதன் தோன்றும் முன் மரம் தொன்றிற்று!
- மரம் நமக்கு அண்ணன், அண்ணனை பழிக்காதீர்கள்!
- மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம்,
- மரம் அப்படியா?
- வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்!
- மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப் புள்ளி.
- மரம் இருக்கும் வரை பூ பூக்கும் இறக்கும் வரை காய் காய்க்கும்.
- வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
- வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?
- மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும்.
- மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்.மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும்.
- நமக்கோ உயிர் பிரிந்தாலும் மயிர் உதிர்ந்தாலும்.
- ஒன்றென்று அறிக!மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது?
- மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
- மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏறி?
- பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?
- மனிதனின் முதல் நண்பன் மரம்!
- மரத்தின் முதல் எதிரி மனிதன்!
- ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
- உண்ண கனி,
- ஒதுங்க நிழல்,
- உடலுக்கு மருந்து,
- உணர்வுக்கு விருந்து,
- அடைய குடில்,
- அடைக்க கதவு,
- அழகு வேலி,
- ஆட தூலி,
- தடவ தைலம்,
- தாளிக்க எண்ணை,
- எழுத காகிதம்,
- எரிக்க விறகு,
- மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
- மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
- பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்,
- நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்,
- எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
- மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
- கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
- துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம்,
- நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
- இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்,
- எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்,
- மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
- மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
- மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!
No comments:
Post a Comment