மரம்

மரம்   பற்றி

  • வணக்கம்...
  • மரங்களைப் பாடுவேன்.
  • வாரும்  வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை  என்ன சொன்னீர்?
  • மரம் என்றீர்
  • மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
  • வணக்கம்,அவ்வையே நீட்டோலை  வாசியான் யார் என்றீர்?
  • மரம் என்றீர்!
  • மரம் என்றால் அத்தனை இழிவா?
  • பக்கத்தில் யாரது பாரதி தானே?
  • பாஞ்சாலி மீர்க்காத பாமரரை என்ன வென்றீர்?
  • நெட்டை மரங்கள் என்றீர்!
  • மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
  • மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
  • பூமியின் ஆச்சிரியகுறி,
  • நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
  • விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
  • சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
  • உயிர் ஒழுகும் மலர்கள்,
  • மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
  • மனிதன் தோன்றும் முன் மரம் தொன்றிற்று!
  • மரம் நமக்கு அண்ணன், அண்ணனை பழிக்காதீர்கள்!
  • மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம்,
  • மரம் அப்படியா?
  • வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்!
  • மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப் புள்ளி.
  • மரம் இருக்கும் வரை பூ பூக்கும் இறக்கும் வரை காய் காய்க்கும்.
  • வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
  • வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?
  • மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும்.
  • மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்.மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும்.
  • நமக்கோ உயிர் பிரிந்தாலும்  மயிர் உதிர்ந்தாலும்.
  • ஒன்றென்று அறிக!மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது?
  • மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
  • மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே தப்பா ஏறி?
  • பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?
  • மனிதனின் முதல் நண்பன் மரம்!
  • மரத்தின் முதல் எதிரி மனிதன்!
  • ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
  • உண்ண கனி,
  • ஒதுங்க நிழல், 
  • உடலுக்கு மருந்து,
  • உணர்வுக்கு விருந்து, 
  • அடைய குடில், 
  • அடைக்க கதவு, 
  • அழகு வேலி, 
  • ஆட தூலி, 
  • தடவ தைலம், 
  • தாளிக்க எண்ணை, 
  • எழுத காகிதம், 
  • எரிக்க விறகு, 
  • மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!! 
  • மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
  • பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம், 
  • நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம், 
  • எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
  • மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம், 
  • கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம், 
  • துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம், 
  • நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம், 
  • இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம், 
  • எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம், 
  • மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான், 
  • மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான், 
  • மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!

No comments:

Post a Comment