Saturday, 19 November 2016

தமிழகத்தில் மரம் வளர்ப்பு ...

தமிழகத்தில் மரம் வளர்ப்பு ...

1. தமிழகத்தின் வனப் பரப்பு 17.59% தான் உள்ளது. இருக்க வேண்டிய பரப்பளவு 33%
2. தமிழகத்தில் 7 வேளாண்மை தட்ப வெப்ப மண்டலங்கள் இருப்பதால் அதிக வகையான மரங்களை வளர்க்க இயலும்.
3. மழையளவு தமிழகத்தில் சுமார் 950 mm அளவிலேதான் கிடைக்கிறது. அதனை சிக்கனமாக பயன்படுத்தி மர வளர்ப்பில் ஈடுபட்டால் நிறைய தரிசுநிலங்களை உபயோகப்படுத்த முடியும்.
4. மரங்கள் அதிகமாக அதிகமாக மழையளவு அதிகரிக்கும். மண்ணரிப்பு குறைந்து நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். நீருக்கான அண்டை மாநில தகராறுகள் குறையும்.
5. 1,000+ கி.மீ நீளமுள்ள கடற்கரை இருப்பதால் அலையாத்திக் காடுகளை உண்டாக்கினால் கடலரிப்பிலிருந்து நிலபரப்பை காப்பதோடு சுனாமி போன்ற இடர்களை எளிதில் சமாளிக்கலாம். கடலோர நிலத்தடி நீர் உப்பு நீராய் மாறுவதை குறைக்கலாம்.
6. புவிவெப்பத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்ப உயர்வால் தானிய உற்பத்தி பாதிக்கப்படும். அதனைக் குறைக்க மரம் வளர்க்கப்பட வேண்டும்.(உலக சராசரி வெப்பதில் சுமார் 1டிகிரி c உயர சுமார் 10% இந்திய கோதுமை உற்பத்தி பாதிக்கபடும் என்று டாக்டர்.M.S.சாமிநாதன் கூறுகிறார்.)
7. விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாகுறை இருப்பதால் மரவளர்ப்பு அந்த குறையை போக்கும்.
படங்கள் உதவி : வலைதளம் படம் 1 இல் 17.4% என இருக்கும். அதிக வேறுபாடு இன்மையால் படம் எடுத்துக் கொள்ளபட்டது.

சட்டங்களும், திட்டங்களும்.

8. இந்தியாவிலேயே தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வனங்களுக்கு வெளியே மரம் வளர்ப்பு” TREE CULTIVATION IN PATTA LANDS (TCPL) திட்டதின் கீழ் மரநாற்றுக்கள் தந்து வளர்ப்பதற்கு ஊக்க தொகையும் வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு தருகிறார்கள். மாவட்ட வனதுறையின் விரிவாக்க அலுவலகத்தை அணுகவும்.

9. “தேசீய புதுமை வேளாண்மை திட்டத்தின்” கீழ் வனக்கல்லூரி மேட்டுப்பாளையம், விவசாயிகள், கடனுதவிக்கு வங்கிகள், ஒப்பந்த முறையில் அறுவடையை வாங்க கம்பெனிகள் என்று தமிழகத்தில் மர வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது. வன கல்லூரி மேட்டுப்பாளையம் 641 301 அணுகவும்.
10. மிக வேகமாக வளரும் மூங்கிலை தேசீய மூங்கில் இயக்கத்தின் கீழ் தமிழக அரசின் தோட்டக்கலை துறை மூலமாக மானியத்துடன் விவசாயிகள் வளர்க்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
11. தமிழகத்தில் நன்கு வளரும் புங்கன், புன்னை போன்றவை “ப்யோ-டீசலாகவும்” வேம்பு இயற்கை பூச்சிக்கொல்லி தாயாரிக்கவும் பயன்படுகிறது. எண்ணை தரும் வெளிநாட்டு மரமான சொர்க்கமரமும் தமிழகத்தில் நன்கு வளர்கிறது. எதிர்காலத்தில் எண்ணை மரங்களுக்கு மதிப்பு உண்டு.
12. நமது மாநில மரமான “கற்பகதரு” பனை மரத்திற்கு வாரியம் ஏற்படுத்தி பனை மரத்தை வளர்க்க உதவுகிறார்கள். மேலும் தொடர்பிற்கு : வேளாண்மை பல்கலைகழகம் (கோவை)
13. இரண்டு பெரிய காகித ஆலைகள் தமிழகத்திலுள்ளது இவைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள் மரம். அவைகளை ஒப்பந்த விவசாயம் மூலம் வளர்க்கவும்,வாங்கவும் தயாராகவுள்ளனர்.
14. மரத்துண்டுகள், மரக்குச்சிகள், மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தமிழகத்தில் ஆரம்பித்துள்ளனர்.எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியின் ஆண்டுத் தேவை சுமார் 40,000 டன் (உலர்ந்தது).
15. நாட்டின் 80% தீக்குச்சிகள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாத உற்பத்திக்கு 10,000 டன் மரம் தேவை. அவைகள் 80% கேரளாவிலிருந்தும் 3% கர்னடாகாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சமயம் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பீதணக்கன் மரம் தரிசுநிலத்தில் நன்கு வளரக்கூடியது என்பது தமிழகத்திற்கு சாதகமானது. எனது பழைய பதிவு
16. உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் சந்தனமரம் சிறப்புப் பெற்றது. அதனை தனியார் நிலங்களில் வளர்க்க தமிழகத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
17. அழிவின் விளிம்பில் இருக்கும் அசோகமரம் (Asoka saraka), அரிய, விலை மிக்க செஞ்சந்தனம் (Pterocarpus santalinus L. ), குமிழ் போன்ற தென்னிந்தியாவில் நன்கு வளரும் மரங்களை நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தரவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கும் தேசீய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் மூலம் மானியம் தருகிறார்கள்

No comments:

Post a Comment