மரம் என்னும் வரம்
மரம் என்னும் வரம்
மரம் இறைவன் தந்த வரம்
மனித குலத்தை வாழ்விக்க வந்த தாவரம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம்.
மண்மகள் மேல் முளைத்துள்ள பலவிதமான தாவரம்
மழையை மேகத்திடமிருந்து பெற்று தன் வேர்க்கால்களில்
தேக்கி நீர்வீழ்ச்சியாகவும் ,நதியாகவும் பாய்ந்து
வாழ்விக்க வந்த கண் கண்ட தெய்வம் மரங்களே
அனைத்து உயிர்களும் வெளியிடும் கரிம வாயுமனைத்தையும்
அனைத்து இயந்திரங்கள்,மற்றும் சாதனங்களிளிருந்தும்
வெளிவரும் நச்சு வாயுக்களையும் உட்கொண்டு
பிராண வாயுவினை அளித்து உயிரினங்களையும்
மனித குலமனைத்தையும் காக்கும் மரங்கள் எல்லாம்
சிவபெருமானின் வடிவங்கள்தானன்ரோ
இதிஹாச புராணங்களில் குறிப்பிட்டுள்ள
ஆலகால நஞ்சுவினை தான் உட்கொண்டு
அகிலத்து உயிரினங்களை காத்த அந்த சிவம்
தாவரங்களாய் மரங்களாய் கண்ணுக்கெதிரில்
நின்றிருந்தும் கண்ணிருந்தும் குருடராய் போய்விட்ட சிலர்
கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை என்று பிதற்றுவது மடமையன்றோ ?
பரந்தாமனை பச்சை மாமலை என்றும்
அன்னை பார்வதியை பச்சை நிறமுடையாள் என்றும்
புராணங்களில் வர்ணித்திருப்பது அதனால்தானன்ரோ .
காண்பவை யாவிலும் அனைத்திலும் கலந்து
நம் கண் முன்னே நிற்கின்ற அவளை அறியாமல்
எங்கேயோ எதிலேயோ தேடிகொண்டிருக்கும்
மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது ?
எல்லோரையும் ஈன்றவள் ,எல்லோரையும் காப்பவள் ,
முடிவில் எல்லோரையும் தன்னில் கொள்பவள்
அவள் யார் தெரியுமா?
மரங்களூடே,மலைகளூடே கடல்களூடே,
மற்றும் மண் முழுதும் படர்ந்தவள்
இலையாகவும்,பூவாகவும் பிஞ்சாகவும்
காயாகவும் கனியாகவும் விதையாகவும்
உணவாகவும் மருந்தாகவும் அமைந்து
அனைத்து உயிர்களையும் காப்பவள்
தானும் இவ்வுலகில் இருந்துகொண்டு
அனைத்தையும் வாழ்விப்பவள்
இதை அறிந்துதான் நம் முன்னோர்கள்
மரங்களை தெய்வம்கள் என போற்றி
வழிபாடு செய்யும் நெறியை ஏற்படுத்தினரோ ?
சிவபெருமான் முனிவர்களுக்கு ஆலமரத்தின்
அமர்ந்துதான் முனிவர்களுக்கு ஞானத்தை போதித்தான்
புத்தன் அரச மரத்தினடியில் அமர்ந்து
தவம் செய்து ஞானத்தை பெற்றான்
மரங்கள் எல்லாம் தெய்வாம்சம் பொருந்தியவை
என்று நன்கறிந்த நம் முன்னோர்கள்
ஒவ்வொரு கோயிலிலும் ஒரு தல விருட்சத்தை
நட்டு பாதுகாத்து வந்தனர் அன்றோ?
ஆலயங்களில் உள்ள சிலைகள் மனிதர்கள் அமைத்தவை
அவைகளை மனிதர்களிடமிருந்து மனிதர்கள்தான் பாதுகாக்க வேண்டும்
ஆனால் மரங்களையும் தாவரங்களையும்
நாம் நடாமலேயே அவைகள் தோன்றுகின்றன
அவைகளை நாம் அழிக்காமல் பாதுகாத்தால்
அவைகள் தம்மையும் காத்துகொண்டு
தன்னிடம் உள்ள அனைத்தையும்
மனித குலத்திற்கு தந்து நம்மையும் வாழ்விக்கும்
கண் முன்னே தோன்றும் கடவுளாகிய
மரங்களை பாதுகாத்து வணங்கிடுவீர்.
நன்மை செய்யும் அவைகளுக்கு நாம் காட்டும் நன்றிதான் அது
வெட்டி பேச்சு பேசிக்கொண்டு
அவைகளை வெட்டி வீழ்த்தி காசாக்காதீர்
மாடுகள் கட்ட மரம் வேண்டும் ,
ஆடுகள் வெட்டி தொங்கவிட மரம் வேண்டும்
வீடுகள்கட்ட மரம் வேண்டும்
அதை கட்ட சாரம்கட்ட மரம் வேண்டும்
பாலம் கட்ட மரம் வேண்டும்
ஏன், மண்டையை போட்டால்
பாடை காட்டவும் அந்த மரம்தான் வேண்டும்.
பணப்பெட்டி செய்யவும்
சவப்பெட்டி செய்யவும் மரம் வேண்டும்.
கால்நடைகளுக்கு உணவாக ,பயிர்களுக்கு உரமாக தழை வேண்டும்
வெய்யிலின் கொடுமையிலிருந்து
தப்பிக்க மரம்நிழல் வேண்டும்
பள்ளியில் பிள்ளைகள் அமர்ந்து படிக்க மரத்தடி நிழல் வேண்டும்.
நாம் இந்த உலகத்தில் ஜாலியாக இருக்க வேண்டுமென்றால்
காலியாக உள்ள இடத்தில் எல்லாம் மரங்களை நடுவீர்
நட்டு பாதுகாப்பீர் நல்லது செய்வீர்.நன்மையை பெறுவீர்
நாளைய உலகம் உங்களை வாழ்த்தும்
அசோகா மன்னன் இன்றளவும்
மக்களால் நினைவு கொள்ளப்படுவது
அவன் தொடங்கிவைத்த மரம் நடும் பணிதான் அன்றோ.
உயிரற்ற சிலைகளுக்கு உயிர் கொடுத்து
குடம் குடமாய் திருமஞ்சனம் செய்து
ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும்
பக்தர்களே சிவாபார்வதியாய் ,
பரந்தாமனாய் உயிரோடுஇருந்துகொண்டு
நம்மை வாழ்வித்துக்கொண்டிருக்கும்
தாவரங்களுக்கும்,மரங்களுக்கும்
நீர்விட்டு,உரமிட்டு பாதுகாத்து வருவதும்
ஒரு உண்மையான வழிபாடாகும்
என்பதுதான் உண்மை.
மரம் இறைவன் தந்த வரம்
மனித குலத்தை வாழ்விக்க வந்த தாவரம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம்.
மண்மகள் மேல் முளைத்துள்ள பலவிதமான தாவரம்
மழையை மேகத்திடமிருந்து பெற்று தன் வேர்க்கால்களில்
தேக்கி நீர்வீழ்ச்சியாகவும் ,நதியாகவும் பாய்ந்து
வாழ்விக்க வந்த கண் கண்ட தெய்வம் மரங்களே
அனைத்து உயிர்களும் வெளியிடும் கரிம வாயுமனைத்தையும்
அனைத்து இயந்திரங்கள்,மற்றும் சாதனங்களிளிருந்தும்
வெளிவரும் நச்சு வாயுக்களையும் உட்கொண்டு
பிராண வாயுவினை அளித்து உயிரினங்களையும்
மனித குலமனைத்தையும் காக்கும் மரங்கள் எல்லாம்
சிவபெருமானின் வடிவங்கள்தானன்ரோ
இதிஹாச புராணங்களில் குறிப்பிட்டுள்ள
ஆலகால நஞ்சுவினை தான் உட்கொண்டு
அகிலத்து உயிரினங்களை காத்த அந்த சிவம்
தாவரங்களாய் மரங்களாய் கண்ணுக்கெதிரில்
நின்றிருந்தும் கண்ணிருந்தும் குருடராய் போய்விட்ட சிலர்
கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை என்று பிதற்றுவது மடமையன்றோ ?
பரந்தாமனை பச்சை மாமலை என்றும்
அன்னை பார்வதியை பச்சை நிறமுடையாள் என்றும்
புராணங்களில் வர்ணித்திருப்பது அதனால்தானன்ரோ .
காண்பவை யாவிலும் அனைத்திலும் கலந்து
நம் கண் முன்னே நிற்கின்ற அவளை அறியாமல்
எங்கேயோ எதிலேயோ தேடிகொண்டிருக்கும்
மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது ?
எல்லோரையும் ஈன்றவள் ,எல்லோரையும் காப்பவள் ,
முடிவில் எல்லோரையும் தன்னில் கொள்பவள்
அவள் யார் தெரியுமா?
மரங்களூடே,மலைகளூடே கடல்களூடே,
மற்றும் மண் முழுதும் படர்ந்தவள்
இலையாகவும்,பூவாகவும் பிஞ்சாகவும்
காயாகவும் கனியாகவும் விதையாகவும்
உணவாகவும் மருந்தாகவும் அமைந்து
அனைத்து உயிர்களையும் காப்பவள்
தானும் இவ்வுலகில் இருந்துகொண்டு
அனைத்தையும் வாழ்விப்பவள்
இதை அறிந்துதான் நம் முன்னோர்கள்
மரங்களை தெய்வம்கள் என போற்றி
வழிபாடு செய்யும் நெறியை ஏற்படுத்தினரோ ?
சிவபெருமான் முனிவர்களுக்கு ஆலமரத்தின்
அமர்ந்துதான் முனிவர்களுக்கு ஞானத்தை போதித்தான்
புத்தன் அரச மரத்தினடியில் அமர்ந்து
தவம் செய்து ஞானத்தை பெற்றான்
மரங்கள் எல்லாம் தெய்வாம்சம் பொருந்தியவை
என்று நன்கறிந்த நம் முன்னோர்கள்
ஒவ்வொரு கோயிலிலும் ஒரு தல விருட்சத்தை
நட்டு பாதுகாத்து வந்தனர் அன்றோ?
ஆலயங்களில் உள்ள சிலைகள் மனிதர்கள் அமைத்தவை
அவைகளை மனிதர்களிடமிருந்து மனிதர்கள்தான் பாதுகாக்க வேண்டும்
ஆனால் மரங்களையும் தாவரங்களையும்
நாம் நடாமலேயே அவைகள் தோன்றுகின்றன
அவைகளை நாம் அழிக்காமல் பாதுகாத்தால்
அவைகள் தம்மையும் காத்துகொண்டு
தன்னிடம் உள்ள அனைத்தையும்
மனித குலத்திற்கு தந்து நம்மையும் வாழ்விக்கும்
கண் முன்னே தோன்றும் கடவுளாகிய
மரங்களை பாதுகாத்து வணங்கிடுவீர்.
நன்மை செய்யும் அவைகளுக்கு நாம் காட்டும் நன்றிதான் அது
வெட்டி பேச்சு பேசிக்கொண்டு
அவைகளை வெட்டி வீழ்த்தி காசாக்காதீர்
மாடுகள் கட்ட மரம் வேண்டும் ,
ஆடுகள் வெட்டி தொங்கவிட மரம் வேண்டும்
வீடுகள்கட்ட மரம் வேண்டும்
அதை கட்ட சாரம்கட்ட மரம் வேண்டும்
பாலம் கட்ட மரம் வேண்டும்
ஏன், மண்டையை போட்டால்
பாடை காட்டவும் அந்த மரம்தான் வேண்டும்.
பணப்பெட்டி செய்யவும்
சவப்பெட்டி செய்யவும் மரம் வேண்டும்.
கால்நடைகளுக்கு உணவாக ,பயிர்களுக்கு உரமாக தழை வேண்டும்
வெய்யிலின் கொடுமையிலிருந்து
தப்பிக்க மரம்நிழல் வேண்டும்
பள்ளியில் பிள்ளைகள் அமர்ந்து படிக்க மரத்தடி நிழல் வேண்டும்.
நாம் இந்த உலகத்தில் ஜாலியாக இருக்க வேண்டுமென்றால்
காலியாக உள்ள இடத்தில் எல்லாம் மரங்களை நடுவீர்
நட்டு பாதுகாப்பீர் நல்லது செய்வீர்.நன்மையை பெறுவீர்
நாளைய உலகம் உங்களை வாழ்த்தும்
அசோகா மன்னன் இன்றளவும்
மக்களால் நினைவு கொள்ளப்படுவது
அவன் தொடங்கிவைத்த மரம் நடும் பணிதான் அன்றோ.
உயிரற்ற சிலைகளுக்கு உயிர் கொடுத்து
குடம் குடமாய் திருமஞ்சனம் செய்து
ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும்
பக்தர்களே சிவாபார்வதியாய் ,
பரந்தாமனாய் உயிரோடுஇருந்துகொண்டு
நம்மை வாழ்வித்துக்கொண்டிருக்கும்
தாவரங்களுக்கும்,மரங்களுக்கும்
நீர்விட்டு,உரமிட்டு பாதுகாத்து வருவதும்
ஒரு உண்மையான வழிபாடாகும்
என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment